யாழ் அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டி தொடர்பான கலந்துரையாடல்இடம்பெற்றது!

0
228

யாழ்.மாவட்ட செயலக அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டி தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ் அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டியில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபெற முடியும். இவ் விளையாட்டு போட்டி மூலம் உத்தியோகத்தர்களின் திறமைகளை இனங்காணல், உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தல் மற்றும் உத்தியோகத்தர்களிடையே பரஸ்பர தொடர்புகளை உருவாக்குதல் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டி எதிர்வரும் வாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எஸ்.முரளிதரன் , மாவட்ட செயலக கணக்காளரும் நலன் புரி சங்க தலைவருமான அ. நிர்மல் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், உள்ளகக் கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், மாவட்ட செயலக கிளைத்தலைவர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.