யாழ் சுழிபுரத்தில் இடம்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

0
72

யாழ்ப்பாணம் சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி நிலையத்தில் மாணவர்கைளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
குறித்த கல்வி நிலையத்தில் கல்வி கற்று பல்கலைக்கழக பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த பட்டதாரிகளும் ,க.பொ.த .உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

கல்வி நிலையத்தின் ஓய்வு நிலை அதிபர் ச. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

2023 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் 3 ஏ சித்திகளை பெற்ற ஞானேஸ்வரன் கிந்துஷா மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் சிறப்பு வணிக நிர்வாகமானி பட்டம் பெற்ற சித்திரசேனன் றாகவன், கலாசார சுற்றுலா துறையில் சிறப்பு பட்டம் பெற்ற இராசரத்தினம் தர்ஷன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சங்கானை பிரதேச செயலாளர் கவிதா உதயகுமார், கௌரவ விருந்தினர்களாக , தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி
பரா.நந்தகுமார், சங்கானை அ.மி.த.க பாடசாலை முன்னாள் அதிபர் ம.முகுந்தன், கல்வி நிலைய புலம்பெயர் ஒருங்கிணைப்பாளர்த. தேவகுமார், சுழிபுரம் மேற்கு சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.