
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின், 39 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் 10 ஆவது அமர்வு, இன்று காலை இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
படங்களைப் பெறும் மாணவர்கள் மற்றும் துணைவேந்தர் குழுவினர், மங்கல இசையுடன், பண்பாட்டு அணிவகுப்புடன், மருத்துவ பீட வளாகத்தில் உள்ள, உள்ளக விளையாட்டு அரங்குக்கு அழைத்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து, மங்கல விளக்கேற்றப்பட்டு, அதன் பின்னர், மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்பட்டன.
துணைவேந்தர், மாணவர்களுக்கான பட்டங்களையும், பரிசில்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமான 39 ஆவது பட்டமளிப்பு விழாவில், கடந்த மூன்று நாட்களும் மூன்று அமர்வுகள் இடம்பெற்ற நிலையில், இன்றையதினம், நான்கு அமர்வுகள் இடம்பெறுகின்றன.
இந்தப் பட்டமளிப்பு விழாவில், மூவாயிரத்து 920 பேருக்கு, பட்டங்கள் வழங்கப்படுகின்றன.