யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் அவர்களினால் இன்றைய யாழ் மாநகர சபை அமர்வில் பொலிஸாருக்கு ஏதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 20 திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஐனநாயக ரீதியில் ஏதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தில் பொலிஸாரினால் போராட்டத்தில் கலந்து கொண்ட குறிப்பாக பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இன்றைய மாநகர சபை அமர்வில் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் அவர்களினால் சபையில் கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அதனை முதல்வர் வி.மணிவண்ணன் அவர்களினால் எற்றுக்கொள்ளப்பட்டு சபையில் நிறைவேற்றப்பட்டது.