யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைர விழா, சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
வைர விழாவை முன்னிட்டு, இன்று காலை 9.00 மணிக்கு, கல்லூரி மைதானத்தில், மலர் வெளியீடு இடம்பெற்றது.
பிரதம விருந்தினராக, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.சிறிசற்குணராஜா பங்கேற்றார்.
சிறப்பு விருந்தினராக, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரி இயக்குநர் எஸ்.பரமேஸ்வரன், மதகுருமார், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.