யாழ்மாநகர சபையின் ஆயுள்வேத வைத்தியசாலை நாவாந்துறையில் திறந்து வைப்பு!

0
193

யாழ்.மாநகர சபையினால் நாவாந்துறை ஆயுள்வேத வைத்தியசாலையின் திறப்பு விழாவானது யாழ்.மாநகர ஆணையாளர் திரு.இ.த.ஜெயசீலன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மாநகர முதல்வர் கௌரவ.வி.மணிவண்ணன் அவர்கள்; திறந்து வைத்தார்.
இவ் வைத்தியசாலைக் கட்டடமானது கௌரவ உறுப்பினரான திரு.நீ.பிலிப் அவர்களது வட்டார நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டது. இந் வைத்தியசாலை திறப்பு விழாவில் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர பிரதி ஆணையாளர், செயலாளர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.