களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுத்துறை ரயில் நிலையத்தக்கு அருகில், ரயில் மோதுண்டு நபரொருவர் நேற்று (18) மாலை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவரின் பெயர் விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
அளுத்கமையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்காக நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.