
வடமராட்சி – துன்னாலை தெற்கு ஜே-370 கிராம சேவகர் பிரிவில், விபத்துக்கு உள்ளாகி மாற்றுத் திறனாளியான ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு, இராணுவத்தினர் ஊடாக வீடு கையளிக்கப்பட்டது.
புலம்பெயர் உறவினர் ஒருவரதும், வன்னி எயிட்ஸ் நிறுவனத்தினதும் நிதி அனுசரணையில், நான்காவது சிங்க றெஜிமென்ற் படைப்பிரிவின் ஆளணி மற்றும் கட்டுமாண உதவியுடன், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு, மாற்றுத் திறனாளியான பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
4 ஆவது சிங்க றெஜிமென்ற் தளபதி லெப்டினன்ட் கேணல் தவுலுகல தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சர்ண போதொட கலந்து கொண்டு, வீட்டினை பயனாளியிடம் கையளித்தார்.
நிகழ்வில் 551 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் யூட் காரிய கரவண, இராணுவ தளபதிகள், கரவெட்டி பிரதேச செயலக உதவி பிரதேச செயலர், மத தலைவர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.