வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கு ஐஎஸ்ஏ தரச் சான்றிதழ் வழங்கல்

0
236

இலங்கையின் சரித்திரத்தில் முதன் முதலாக ஒரு தொகுதி பெண்கள் கடல் நீரலைச்சறுக்களில் (சேபிங்) பூரணத்துவமான பயிற்சிபெற்று ஐஎஸ்ஏ தரச் சான்றிதழை தம் வசமாக்கிக்கொண்ட நிகழ்வு அறுகம்பே தனியார் சுற்றுலா விடுதியில் நடைபெற்றது.

அறுகம்பே பெண்கள் சேர்பிங் கழகத்தினர் அவுஸ்திரேலியா நிதி உதவியுடன் ‘ஸ்கில்ஸ் போர் இன்ச்ளுசிவ் குரோவ்த்’ அமைப்பினரால் இப்பயிற்சிநெறி ஆரம்பிக்கப்பட்டதுடன் நேற்று அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது..

சர்வதேச சேர்ப் சங்கத்தின் பயிற்றுவிப்பாளர் பெட்ரிக் ரிநோட் ஒன்பது பெண்களுக்கு இப்பயிற்சியை வழங்கியுள்ளார்

ஸ்கில்ஸ் போர் இன்க்ளுசிவ் குரோவ்த் அமைப்பின் பிராந்திய முகாமையாளர் மரீனா உமேஸ் தலைமையில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபையின் தலைவரும் அறுகம்பே சுற்றுலா சங்கத்தின் தலைவருமான் எம்,எச்.அப்துல் ரஹீம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார் .

சர்வதேச சேர்ப் சங்கத்தின் பயிற்றுவிப்பாளர் பெட்ரிக் ரிநோட்டும் இந்நிகழ்வுகளில் கலந்துகொன்ட்டார்.

பொத்துவில் மண்ணுக்கு ஒரு புகழையும் சாதனையையும் ஏற்படுத்திக்கொடுத்த இப்பெண்கள் பாராட்டுக்குரி யவர்கள். இவர்களது சாதனையால் நாம் பெருமையடைகின்றோம் என பொத்துவில் பிரதேச சபையின் தலைவரும் அறுகம்பே சுற்றுலா சங்கத்தின் தலைவருமான் எம்,எச் ஏ ரகீம் நிகழ்வின் போது கருத்து தெரிவித்தார்.