





வர்த்தக அமைச்சர் கௌரவ பந்துல குணவர்த்தன அவர்கள் யாழ் மாவட்டத்துக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை இன்று மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, நாவற்குழி உணவு களஞ்சியசாலையில் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் நன்மை கருதி அமையப்பெறவுள்ள “ரஜவாச” பல்பொருள் விற்பனை நிலையம் தொடர்பாக அமைச்சரினால் விரிவாக ஆராயப்பட்டதுடன், நிவர்த்தி செய்யப்பட வேண்டிய குறைபாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.
இவ்விஜயத்தின்போது, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள், கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.