வவுனியா விமானப்படையினர் 10 பேருக்கு யாழில் கொரோனா உறுதி

0
253

யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 10 பேருக்குத் தொற்றிருப்பது உறுதிப்படுத்தபட்டுள்ளது என மருத்துவமனைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

நேற்று யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் 293 பேருக்கு
கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

‘வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருக்கும் விமானப் படையைச்
சேர்ந்த 10 பேருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் ஏனையவர்களுக்குக் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது’ எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை வவுனியா விமானப் படைத்தளத்தை ஒட்டியுள்ள தனிமைப்படுத்தல்
நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த பத்துப் பேருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வேறு சில செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன.