28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வவுனியாவில் 60 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை

வவுனியாவில் இம்முறை 59 ஆயிரத்து 564.35 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக நிலவிய வரட்சியுடனான வானிலை காரணமாக குளங்களில் நீர் வற்றியுள்ளது.

தற்போதைய நிலையில் வவுனியாவில் பெரும்போக விவசாய நடவடிக்கையை விவசாயிகள் ஆரம்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இனிவரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பெரும்போக விவசாய நடவடிக்கையினை மேற்கொள்ள முடியுமென விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதற்கிணங்க இம்முறை வவுனியாவில் 59 ஆயிரத்து 564.35 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles