வவுனியா – கொக்குவெளி பகுதியில் வீட்டு வளாகத்தில் இருந்து 9 அடி நீளமான முதலை ஒன்று வனஜீவராசிகள் திணைக்களத்தால் மீட்கப்பட்டுள்ளது.வீட்டிற்கு பின்புறமுள்ள தோட்டப்பகுதியில் நேற்றையதினம் முதலை ஒன்று உள்ளதை வீட்டின் உரிமையாளர் அவதானித்து அதனை துரத்துவதற்கு முற்பட்ட போது குறித்த காணியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட கிணற்றில் முதலை வீழ்ந்துள்ளது.

இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் வனயீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியிருந்தார்.
இதனையடுத்து இன்றையதினம் குறித்த பகுதிக்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர், கிணற்றில் இருந்து முதலையினை பாதுகாப்பாக பிடித்துச்சென்றமை குறிப்பிடத்தக்கது.
