28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வாகன இறக்குமதிக்கு மீண்டும் தடை..!

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குறித்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுமதி வழங்கப்பட்ட மாதத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க சந்தர்ப்பம் வழங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.வாகன இறக்குமதி தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக அதிபர் செயலகம் விசேட குழுவொன்றை நியமித்திருந்தது.அதன்படி வாகனங்களின் தேவை, வீதிகளில் கிடைக்கும் இடவசதி, எரிபொருள் செலவு, வாகன இறக்குமதிக்கான பரிவர்த்தனை தொகை போன்றவற்றில் விசேட கவனம் செலுத்தப்படும் என ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles