கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் அரசுடமையாக்கப்பட்ட மற்றும் இதுவரை உரிமை கோரப்படாத வாகனங்கள் பகிரங்க ஏலத்தில் விற்கப்பட உள்ளதாக நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.
குறித்த வாகனங்கள் எதிர்வரும் 20ஆம் திகதி காலை 9 மணிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து விற்பனை செய்யப்பட உள்ளன.
மோட்டார் சைக்கிள்கள், பட்டா வாகனம் என்பன பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.
ஏல விற்பனைக்கு உட்படுத்தப்பட உள்ள வாகனங்களை உரிமை கோருபவர்கள் யாராவது இருப்பின் ஏல விற்பனை ஆரம்பமாவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் தமது கோரிக்கைகளை சமர்ப்பித்தல் வேண்டும்.
அத்துடன் குறித்த வாகனங்களை, ஏல விற்பனை ஆரம்பமாவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் பார்வையிட முடியும்.
ஏல விற்பனையில் பங்கு பற்றுபவர்கள் தமது ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்த கூடிய செல்லுபடியான ஆவணங்களுடன் பிரசன்னமாகி இருக்க வேண்டும் எனவும் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.