ஹத பிம வீட்டுத்தோட்ட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட பயனாளிகளுக்கான விவசாய மற்றும் சிறுகைத்தொழில் உற்பத்திக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ் .வியாழேந்திரன் நிதி ஒதுக்கீட்டில் சிறுகைத்தொழில் உற்பத்திகளை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .வாசுதேவன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட பயனாளிகளுக்கான விவசாய உபகரணங்கள் மற்றும் சிறுகைத்தொழில் உற்பத்திக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ் .வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பயனாளிகளுக்கான உதவிகளை வழங்கி வைத்தார்
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் .வியாழேந்திரனின் பிரத்தியோக செயலாளர் ரொஸ் மன் ,ஹத பிம அதிகாரசபையின் உத்தியோகத்தரும் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளருமான எ. .சுதர்சன் , மாநகர சபை உறுப்பினர் அசோக் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்
கிராமிய பிரதேச அபிவிருத்தி, கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் தேசிய கமத்தொழில் பல்வகைப்படுத்துகை குடியேற்ற அதிகாரசபையின் விவசாய சமூக பராமரிப்பு திட்டத்தின் கீழ் இலங்கை ஹத பிம அதிகாரசபையின் வீட்டுத்தோட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த வேலைத்திட்டங்களின் கீழ் சமுர்த்தி பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர்களுக்கான 100 மில்லியன் ஒதுக்கீட்டில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.