பதுளை மாவட்டம் ஹாலி எல பிரதேச சபைக்குட்பட்ட ரொக்கதன்ன தோட்டத்திற்கு செல்லும் வீதி, முறையாக இடப்படாமையால் அதனை முழுமையாக சீரமைக்க வேண்டுமென, மலையக தொழிலாளர் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறித்த கொங்ரீட் வீதியை ஏறத்தாள 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வருவதாகவும், முறையான திட்டமிடல் இல்லாமல் போடப்பட்டுள்ளதனால் குறித்த வீதியை பயன்படுத்துபவர்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்குவதாகவும், வீதியை முறையாக செப்பனிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமெனவும் மலையக தொழிலாளர் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.