பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேவேளை இன்றைய தினம் 12 மணி முதல் பிற்பகல் 1.30 வரை வேட்பு மனுக்கள் தொடர்பிலான ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை வேட்பு மனுக்கள் தொடர்பில் இறுதி அறிவிப்பு வெளியான பின்னர் கூட்டங்கள், பேரணிகள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 349 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்துடன், நேற்றுவரை 52 சுயேச்சைக் குழுக்களும் பதிவுசெய்யப்பட்ட 101 அரசியல் கட்சிகளும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.