வேலன் சுவாமியின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
168

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகளின் வழக்கு விசாரணை, எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. யாழ் நீதிமன்ற நீதிமன்ற ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இன்று இடம்பெற்ற வழக்கினை விசாரணை செய்த நீதவான் வழக்கினை எதிர்வரும் 28ம் திகதிக்கு ஒத்திவைத்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில், நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன், வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்க செயலாளர் ஆகியோர் இன்று மன்றில் ஆஜராகிய நிலையில், தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, வழக்கு விசாரணை 28ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.