சீனாவின் ஷியாங் யாங் ஹோங் 3 என்ற சர்ச்சைக்குரிய ஆய்வு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் அது எந்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாது என மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த கப்பலுக்கான அனுமதியை முன்னதாக இலங்கை நிராகரித்திருந்தது.இதனையடுத்து மாலைத்தீவு அதற்கு அனுமதி வழங்கியதுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் குறித்த கப்பல் அங்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் பணியாளர்களின் சுழற்சி மற்றும் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக மாத்திரமே ஷியாங் யாங் ஹோங் 3 என்ற சீன கப்பல் தங்களது கடற்பகுதியில் நங்கூரமிடவுள்ளதாகவும், இது எந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளாது எனவும் மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.