அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை செலுத்த இலகு வழி!

0
25

அதிவேக நெடுஞ்சாலைகளிலும் கட்டணங்களை டெபிட் அல்லது கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி செலுத்தலாம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இத்திட்டமானது மே முதலாம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 கொட்டாவை மற்றும் கடவத்தை வெளியேறும் இடங்களில் ஏற்கனவே ஒரு முன்னோடித் திட்டம் செயல்பட்டு வருவதுடன் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்க ஒவ்வொரு கட்டணத்தையும் 8 வினாடிகளுக்குள் நிறைவு செய்வதே இதன் நோக்கம் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.