32 C
Colombo
Thursday, April 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அமரகீர்த்தி கொலை: இதுவரை 32 பேர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று பிற்பகல் நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவரை இன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலைச் சம்பவம் தொடர்பில் ,துவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles