அம்பாறை கல்முனை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு

0
121

அம்பாறை கல்முனை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள், ஊழியர்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த சேவை வேண்டாம் என தெரிவித்தும் இன்று அடையாள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த செவ்வாய்க்கிழமை அரச போக்குவரத்துப் பணியாளர்களுக்கும், தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. முரண்பாடு கை கலப்பாகவும் மாறியிருந்தது.


இதில் பாதிக்கப்பட்ட சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவங்களுக்கு நீதி கோரியே அடையாள பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.


காலையில் பேருந்துகள் இல்லாத காரணத்தினால் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இ.போ.சவின் தனித்துவத்தை சிதைக்காதே, போக்குவரத்து அமைச்சு தனியாருக்காகவா? என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தினை முன்னெடுத்தனர்.