அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலை, வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு

0
143

அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலை யின் சேவைகள் 17 நாட்களின் பின்னர்  இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலாராணி இஸ்ஷதீன்  இன்று அறிவித்துள்ளார்.
திருக்கோவிலில் மரதனோட்டத்தில் பங்குபற்றிய மாணவனின் உயிரிழப்பு தொடர்பில், போராட்டமொன்று இடம்பெற்று, அது வன்முறை சம்பவமாக மாறியதைக் கண்டித்தும், வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும், கடந்த 11ஆம் திகதி முதல் திருக்கோவில்  வைத்தியசாலையின் வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்
இதனைத் தொடர்ந்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியாக தொடர்ந்து இடம்பெற்று வந்த பல்வேறுபட்ட சுற்றுப் பேச்சுவார்தைகள் மற்றும் பொலிசாரின் துரித சட்ட நீதியான நடவடிக்கைகள் காரணமாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
இதனையடுத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினருக்கும் இடையில் இன்று பிற்பகல் வேளையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வைத்தியசாலையின் அவரசசிகிச்சைப் பிரிவின் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பூரணமான வைத்திய சேவைகள் நானை வியாழக்கிழமை தொடக்கம் வழமைபோல் இடம்பெறும் என இன்றைய கூட்டத்தில் தீர்மானம்  எட்டப்பட்டது.
அதேவேளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரினால் உத்தியோகபூர்வமாக கடிதமும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மற்றும் இவ் வைத்தியசாலையினை மீளவும் திறப்தற்கு சட்ட ரீதியான உதவிய பொலிஸ் அதிகாரிகள் சுகாதார துறைசார் அதிகாரிகள் பிரதேச சமூக நலன்விரும்பிகள் அனைவருக்கும் தமது நன்றிகளை தெரிவித்தனர்
இக்கலந்தரையாடல் கூட்டத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் பிரதேச மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் வைத்தியர்கள் மதகுருமார்கள் அபிவிருத்தி குழு நிருவாகிகள் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.