அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ. டீ.வீரசிங்க தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக திருக்கோவில் பிரதேசத்தில், பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். நிதி ஒதுக்கீட்டிற்கான ஆவணங்களைக் கையளிக்கும் நிகழ்வு மற்றும் பொருட்கள் வழங்கும் நிகழ்வு என்பன நேற்றைய தினம் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
ஆலயங்கள், பாடசாலைகள் மற்றும் பொது அமைப்புகளுக்காக சுமார் 10 இலட்சம் ரூபாய் நிதி உதவிகள் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பங்கேற்றதோடு, பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்க, உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.நிருபா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் அனோஜா உஷாந் பாராளுமன்ற உறுப்பினரின் மாவட்ட, பிரதேச இணைப்பாளர்கள், என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.