அரசாங்கம் இன்னும் ஒரு வருடத்திற்கு கூட நிலைக்காது – குமார வெல்கம

0
139

ராஜபக்ஸக்களின் பிடிக்குள் இருப்பதனாலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தேசிய அரசாங்கத்திற்கு கூட செல்ல முடியாதுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை குறிப்பிட்டார்.

தான் 40 வருடங்களாக ராஜபக்ஸவுடன் இருந்ததாகவும், அதனால் இது தொடர்பில் தனக்கு நன்றாகத் தெரியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனக்கு ஏற்றவாறு அமைச்சரவையை முன்னெடுத்துச்செல்ல முடியாத நிலையிலேயே ஜனாதிபதி தற்போது உள்ளதாக குமார வெல்கம தெரிவித்தார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டை தனியாக வழிநடத்திச்செல்ல முடியாது எனவும் அரசாங்கம் இன்னும் ஒரு வருடத்திற்கு கூட நிலைக்காது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இதன்போது குறிப்பிட்டார்.