அரச அதிகாரிகள், கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை

0
126

மக்களுக்கான பணிகளை விரைவாக முன்னெடுக்கும் வகையில், அலுவலக நேரத்தில், அரச அதிகாரிகள், கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.
அரச அதிகாரிகள், கடமை நேரத்தில், முகநூல், வட்ஸ் அப் பார்த்தவாறு, சேவைகளைப் பெற வந்த மக்களைப் பார்த்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்த நிலையில், அலுவலக நேரத்தில், கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது தொடர்பில், சுற்றறிக்கை வெளியிடலாமா என யோசிப்பதாக, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்ன குறிப்பிட்டுள்ளார்.