28.4 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஆபத்தான நிலையில் மகிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக போலித் தகவல்!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலித் தகவல்கள் வெளியாகி உள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ஷவின் முன்னாள் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் காசிநாதன் கீத்நாத் த

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என அவரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும்இ அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் இன்று பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில்இ இது தொடர்பில் எமது செய்தி பிரிவு முன்னாள் பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்டவிடம் வினவியபோதுஇ ​​குறித்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனத் தெரிவித்தார்.
அத்துடன்இ முன்னாள் பிரதமர் நலமுடன் இருப்பதாகவும்இ தனது அன்றாடப் பணிகளை எந்தவித இடையூறும் இன்றி அவர் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles