இத்தாலியில் வெள்ளத்தால் 13 பேர் உயிரிழப்பு

0
176

இத்தாலியில் வெள்ளம் காணரமாக 13 பேர் உயிரிந்துள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இத்தாலியின் வடகிழக்குப் பிராந்தியத்தில் 6 மாத காலத்தில் பெய்யக்கூடிய மழை ஒன்றரை நாட்களில் பெய்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

வேள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பகுதியளவு மின்சார விநியோகம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால், தற்போதும் 27,000 மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.