இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் பட்மிண்டன் வீராங்கனை பி. வி. சிந்துவுக்கு எதிர்வரும் 22ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை சிந்து திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
திருமணம் உதய்பூரில் நடைபெறவுள்ளது என்று சிந்துவின் குடும்பத்தினர் கூறினர்.
2024 சையத் மோடி சர்வதேச ஓபன் தொடரில் பி. வி. சிந்து சம்பியன் பட்டம் வென்றார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் வென்றுள்ள பட்டமாக இது அமைந்துள்ளது.
29 வயதான பி. வி. சிந்து, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளியும், ரோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றுள்ளார்.
2019இல் உலக சம்பியன்ஷிப் தொடரில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.