இப்படியும் நடக்கிறது

0
94

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்று சொல்லப்படும் இந்திய பொதுத் தேர்தல் நடந்து முடிந் துவிட்டது. நாளை காலையில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளி வரத் தொடங்கும். தற்போதைய ஆளும் கட்சி யான பாரதிய ஜனதாவும் – பிர தமர் நரேந்திர மோடியும் மீண் டும் ஆட்சிக்கு வருவார்கள் என் பதில் யாருக்கும் சந்தேகம் இருப் பதாகத் தெரியவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டதி லிருந்து நானூறு இடங்களில் வெற்றிபெறமுடியும் என்ற நம் பிக்கையை வெளிப்படுத்தி வந்த பாரதிய ஜனதா கட்சியினர், தமது வெற்றிக்கு மோடி என்ற இரண்டெழுத்தை மாத்திரமே நம்பிக்கொண்டிருந்தனர்.
ஆனால், அந்த நம்பிக்கை முதல் இரண்டு கட்ட வாக்களிப்பின் பின்னர் மாறிப்போ னது. மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவடைந்தமை ஆளும் கட்சிக்கு பாதகமாகவே இருக் கும் என்ற பொதுத் ‘தியறி’ பாரதிய ஜனதா கட்சியினரை சிந்திக்க வைத்ததுடன், தமது தேர்தல் பிரசார யுத்தியையும் மாற்றவேண்டும் என்ற கட்டாயத்துக்குத் தள்ளியது. இதனால், வழக்கமான தமது அரசியலை கையில் எடுத்த பாரதிய ஜனதா கட்சியினர், அதிலும் அதன் ஒரே முகமாக இருந்த பிர தமர் மோடி மதவாதத்தை கையில் எடுத்தார். முஸ்லிம்களுக்கு எதிரான தனது வழக்கமான பிரசா ரத்தை தீவிரப்படுத்தத் தொடங் கினார். இந்த இடையில்தான் அந்தச் சம்பவம் நடந்தது. குஜராத் மாநிலத்தின் அகம தாபாத் நகரில் நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் நால்வரும் முஸ்லிம்கள் என்பதும் அவர்கள் கைதுசெய்யப்பட்டதும், அவர்கள் தங்களை ஐ. எஸ். ஐ. எஸ். அமைப்புடன் சம்பந்தப்படுத்தினரென விசா ரணைகளில் தெரிவித்தார்கள் என்றதும் இந்தியாவில் முக்கிய செய்திகளாகின. இந்த நேரத்தில் இதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், இந்தி யாவில் நடந்த பொதுத்தேர்த லில் என்ன நடந்தது என்பதைத் திரும்பிப் பார்க்கவேண்டியதாகிறது. அப்போதும் இப்படித்தான் முதல் சில கட்ட வாக்குப்பதிவு கள் நடந்து முடிந்த பின்னர், இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடந்தது. அந்தத் தாக் குதலை ஐ. எஸ். ஐ. எஸ். அமைப்பு உரிமை கோரியதும், இந்தியாவி லும் அதுபோன்ற தாக்குதல்கள் நடக்கலாம் என்றும் அப்படியெனில், அதனைத் தடுக்கக் கூடிய தலைவர் ஒருவர் ஆட்சி யில் இருக்கவேண்டும் என்ற எண்ணமும் இந்தியர்கள் மத்தியில் ஊடகங்களால் விதைக்கப்பட்டது. அதன் மறைமுக கருத்து மோடி மீண்டும் ஆட்சியில் இருந் தால் மாத்திரமே முஸ்லிம் தீவிர வாதத்தைத் ‘துடைக்கலாம்’ என்று அர்த்தம் கொள்ளப்பட் டது. அந்தப் பிரசாரமும் கைகொடுத்ததாகவே தேர்தல் முடிவுகள் இருந்தன.
அதாவது, ஈஸ்டர் தாக்குதல் நடப்பதற்கு முன்னர் வாக்குப்பதிவு நடைபெற்ற இடங் களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்த வெற்றியிலும் பார்க்க, தாக்குதலுக்கு பின்னர் நடை பெற்ற வாக்குப்பதிவுகளில் பார திய ஜனதா கட்சிக்கு கிடைத்த வெற்றிகள் அதிகமாக இருந்தன. அதாவது, ஈஸ்டர் தாக்குதல் ஒருவகையில் மோடிக்கும் பயனளித்தது. இதுபற்றி முன்னரும் இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந் தேன். இப்போது, நான்கு இலங் கையர்கள் கைதுசெய்யப்பட்ட மையும் அவர்கள் ஐ. எஸ். ஐ. எஸ். தீவிரவாதிகள்தான் என்றும் – அவர்கள் தாக்குதல் ஒன்றுக்கா கவே குஜராத் வந்திருந்தனரென வும் விசாரணைகளில் தெரிவித் தனரென இந்திய ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டன.
இதற்கு சமாந்தரமாகவே, பிர தமர் மோடியும் முஸ்லிம்களுக்கு எதிரான தனது பிரசாரத்தை தீவி ரப்படுத்தியிருந்தார். இந்தவேளையில்தான் வழக் கம்போல நமது சரத் வீரசேகர, விமல் வீரவன்ஸ வகையறாக்க ளும் முஸ்லிம்களுக்கு எதிரான தமது பிரசாரங்களை மீண்டும் தீவிரப்படுத்தியிருந்தனர். இந்த நேரத்தில்தான், அந்த நால்வரையும் இந்தியாவுக்கு அனுப்பியவர் என்றும் அல்லது அவர்களோடு தொடர்பில் இருந் தவர் எனவும் இலங்கையில் ஒரு வர் தேடப்படுகிறாரென செய்தி கள் வந்தன. அந்த செய்திகளில் தேடப்பட்டவர் முஸ்லிம் சமூ கத்தைச் சேர்ந்த ஒருவர் அல்ல என்பதும் – இவர்கள் ஏதோ ஒரு தேவைக்காகவே அங்கு அனுப் பப்பட்டனரா என்ற சந்தேகமும் ஏற்பட்டதைத் தவிர்க்க முடிய வில்லை.
இந்த நால்வரை பற்றியும் விசாரணை நடத்திய இலங்கை அதிகாரிகள் கடைசியாக வெளியிட்ட குறிப்பு நமது கவனத்துக்குரியது. ‘இந்தியாவின் குஜராத் மாநி லத்தில் ஐ. எஸ். ஐ. எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய வர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை யர்கள் நால்வரும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்க ள் என்றும் அவர்கள் மதத் தீவிர வாதிகள் இல்லை’ எனவும் பாது காப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள் ளார். இந்தச் செய்தி சொல்லும் தகவல் கூர்ந்து கவனிக்க வேண் டிய ஒன்று. போதைப்பொரு ளுக்கு அடிமையான நான்கு முஸ்லிம்களும் இங்கிருந்து யாரோ ஒருவரால் இந்தியாவின் சென்னைக்கு அனுப்பப்பட்டி ருக்கின்றனர். அவர்கள் பின்னர் இந்து- முஸ்லிம் மதத்தினரி டையே சர்ச்சைக்குரிய மாநிலமான குஜராத்துக்கு அனுப்பப் பட்டிருக்கின்றனர்.
அவ்வாறு அனுப்பப்பட்ட வர்கள் அங்கு கைது செய்யப் பட்டமையும் தங்களை ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பிரதானியான சஹ்ரானின் கூட்டாளிகள் என் றும் அந்த அமைப்புடன் சம்பந் தப்பட்டவர்கள் எனவும் அவர் களே கூறினரெனவும் செய்திகள் வெளிவந்தன. இவை எல்லாவற்றையும் கூட் டிக்கழித்து பார்க்கின்றபோது பல கேள்விகள் நம்முள் எழுவ தைத் தவிர்க்கமுடியவில்லை.!

  • ஊர்க்குருவி.