இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பாம்பனில் போராட்டம்!

0
11

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த வியாழக்கிழமை இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் 14 பேரைக் கைது செய்தனர்.

இராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற இந்திய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.14 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல்இ தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மீனவர்களை எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மீனவர்களின் கைது நடவடிக்கையைக் கண்டித்தும்இ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று இந்த போராட்டம் நடைபெறுகிறது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பாம்பனில் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி இறங்குதளத்தில் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று நங்கூரமிடப்பட்டிருந்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.