உடனடியாக தேர்தலுக்கு தயாராகுமாறு பசில் ராஜபக்ச அறிவிப்பு!

0
190

அவசரகால ஜனாதிபதி தேர்தலை விடுத்து மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பசில் ராஜபக்ச இதனை வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, உடனடியாக தேர்தலுக்கு தயாராகுமாறு முன்னாள் எம்.பி.க்களுக்கு பசில் ராஜபக்ச அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இந்திய செல்வாக்கு காரணமாக மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளதாக தெரியவிக்கப்படுகின்றது.