31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று – கல்வி அமைச்சர்

2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நேற்று நிறைவடைந்தது.இந்நிலையில் இப்பரீட்சையின் முதல் நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 06 பரீட்சார்த்திகள் இருந்ததாகவும், மூன்று வாரங்களுக்குள் கொரோனா தொற்றுக்குள்ளாகிய பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட 27 பரீட்சார்த்திகள் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையிலும் (ஐ.டி.எச்), பனாகொடை இராணுவ முகாமில் ஒரு பரீட்சார்த்தியும், மற்றொரு பரீட்சார்த்தி முல்லேரியா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போதும் அவர்கள் அனைவரும் பரீட்சைக்குத் தோற்றினர்.இந்த மூன்று வார பரீட்சையின்போது, தனிமைப்படுத்தப்பட்ட 568 பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைக்குத் தோற்ற உரிய வசதிகள் அதிகாரிகளால் செய்துகொடுக்கப்பட்டன என அவர் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles