32 C
Colombo
Thursday, March 30, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்பட்ட வாகனம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்தியதும், நுவரெலியா பயிற்சி முகாமுக்கு நபர்களை அழைத்துச் செல்ல பயன்பட்டதுமான டொல்பின் ரக வாகனத்தை பொலிஸார் நேற்று (22) கைப்பற்றியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொஹமட் ஹனிபா மொஹமட் அக்ரமினால் நுவரெலியாவில் உள்ள பயிற்சி முகாமுக்கு நபர்களை அழைத்து சென்ற வாகனம் இதுவென கண்டறியப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு குறித்;த வேன் விற்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் அந்த வேனை கைப்பற்றி அதனை காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த வாகனம் கண்டி பகுதியில் உள்ள ஒரு வாகன விற்பனை நிலையத்தில் இருந்தும் அது விற்பனையாகாததால் கடந்த மாதம் அந்த வாகனத்தை சாய்ந்தமருது பகுதியில் உள்ள வாகன விற்பனை நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அங்கு வைத்து கடந்த செப்டேம்பர் மாதம் 4 ஆம் திகதி தற்போதைய உரியாளர் கொள்வனவு செய்துள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொஹமட் ஹனிபா மொஹமட் அக்ரம் கொள்வனவு செய்து பயன்படுத்திய மற்றுமொரு சிறிய ரக வாகனம் ரிஸ்வி நகரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கடந்த 16 ஆம் திகதி கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related Articles

சிலியில் முதன்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல் பரவல்

தெற்கு அமெரிக்க நாடான சிலி மாகாணத்தில் முதல் முறையாக மனிதர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட...

மியன்மாரில் 40 அரசியல் கட்சிகள் கலைப்பு – இராணுவ ஆட்சியாளர்கள் அறிவிப்பு

மியன்மாரில் 40 அரசியல் கட்சிகளை; கலைக்கும் இராணுவ ஆட்சியாளர்களின் முடிவை அவுஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் பிரிட்டன் ஆகிய நாடுகள் கண்டித்துள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜனநாயக தலைவர்...

இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்!

பேருவளை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் 1 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சிலியில் முதன்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல் பரவல்

தெற்கு அமெரிக்க நாடான சிலி மாகாணத்தில் முதல் முறையாக மனிதர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட...

மியன்மாரில் 40 அரசியல் கட்சிகள் கலைப்பு – இராணுவ ஆட்சியாளர்கள் அறிவிப்பு

மியன்மாரில் 40 அரசியல் கட்சிகளை; கலைக்கும் இராணுவ ஆட்சியாளர்களின் முடிவை அவுஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் பிரிட்டன் ஆகிய நாடுகள் கண்டித்துள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜனநாயக தலைவர்...

இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்!

பேருவளை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் 1 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஒரு இலட்சம் அமெரிக்க டொலரில் வர்த்தககட்டடத்தை அமைக்கிறது நிந்தவூர் பிரதேச சபை

நிந்தவூர் பிரதேச சபை அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்குள் முதலிடம் பெற்றமையினால், பரிசுத் தொகையாக கிடைக்கப்பெற்ற ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் நிதியினைக் கொண்டு நிந்தவூர் பிரதேச சபைக்கு சொந்தமான...

தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு அர்ஜுன ரணதுங்கவுக்கு கடிதம்

தேசிய விளையாட்டு சபையின் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக  விலகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் அர்ஜுன ரணதுங்கவுக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த...