உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்;. தேர்தலின் போது ஒவ்வொருவருடைய பலத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மக்கள் தேர்தலைக் கோரவில்லை. எனினும் எதிர்க்கட்சியின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றும். தேர்தலில் மக்கள் அவர்களுக்கு சிறந்த பதிலை வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.