உரும்பிராயில் மதுபானசாலை சுகாதாரபிரிவினரால் மூடப்பட்டது

0
237

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு கள் விற்று வந்த காசில் உரும்பிராய் மதுபானசாலையில் மதுபானம் வாங்கிய நபரால் மதுபான விற்பனை நிலையம் பூட்டப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தனிமைப் படுத்தல் நிலையமாக கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி செயற்பட்டுவரும் நிலையில் வெளி மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சுயதனிமைப் படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நபர் ஒருவர் கல்வியியற் கல்லூரி சுற்றாடலில் வசிக்கும் ஒருவரின் தொடர்பை எடுத்து மதில் வழியாக கள்ளு வாங்கியுள்ளார். இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணையில்,

தேசிய கல்வியியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவருக்கு கள் விற்பனை செய்த பணத்தில் உரும்பிராய் சந்தி மதுபான நிலையத்தில் மதுசாரம் வாங்க சென்றுள்ளதை ஒத்துக் கொண்டுள்ளார்.

இதனடிப்படையில் பொதுச் சுகாதார பரிசோதகரும் பொலிசாரும் இணைந்து கொரோணா தொற்று பரவலை தடுக்கும் முன் எச்சரிக்கையாக குறித்த மதுபான நிலையத்தை மூடியதுடன் அங்கு கடமையாற்றுபவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர்.