24 C
Colombo
Saturday, March 25, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

உரும்பிராயில் மதுபானசாலை சுகாதாரபிரிவினரால் மூடப்பட்டது

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு கள் விற்று வந்த காசில் உரும்பிராய் மதுபானசாலையில் மதுபானம் வாங்கிய நபரால் மதுபான விற்பனை நிலையம் பூட்டப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தனிமைப் படுத்தல் நிலையமாக கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி செயற்பட்டுவரும் நிலையில் வெளி மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சுயதனிமைப் படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நபர் ஒருவர் கல்வியியற் கல்லூரி சுற்றாடலில் வசிக்கும் ஒருவரின் தொடர்பை எடுத்து மதில் வழியாக கள்ளு வாங்கியுள்ளார். இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணையில்,

தேசிய கல்வியியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவருக்கு கள் விற்பனை செய்த பணத்தில் உரும்பிராய் சந்தி மதுபான நிலையத்தில் மதுசாரம் வாங்க சென்றுள்ளதை ஒத்துக் கொண்டுள்ளார்.

இதனடிப்படையில் பொதுச் சுகாதார பரிசோதகரும் பொலிசாரும் இணைந்து கொரோணா தொற்று பரவலை தடுக்கும் முன் எச்சரிக்கையாக குறித்த மதுபான நிலையத்தை மூடியதுடன் அங்கு கடமையாற்றுபவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர்.

Related Articles

ஆளுநர் நியதிச் சட்டம் உருவாக்கியமை சட்டத்திற்கு முரணனானதுஎன நீதிமன்று அறிவிப்பு,

மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள்

அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ஆளுநர் நியதிச் சட்டம் உருவாக்கியமை சட்டத்திற்கு முரணனானதுஎன நீதிமன்று அறிவிப்பு,

மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள்

அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள்...

நெருக்கடிகள் பல ஏற்படுவதற்கு முன்னர் தேர்தலை நடத்துங்கள்

இந்நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அழிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவது தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே எனவும், இந்நேரத்தில், நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான சர்வஜன வாக்குரிமையை சீர்குலைத்து உரிய...

சிலாபத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஐவர் கைது

சிலாபம் கரையோரக் கடற்படையினர், சிலாபம் - இரணைவில பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 633 கிலோ 650 கிராம் பீடி இலைகள் கண்டுபிடித்துள்ளதாக...