ஏ-9 வீதியில் விபத்து: பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

0
120

முறிகண்டிக்கும் இரணைமடு சந்திக்கும் இடையில் உள்ள ஏ-9 வீதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியும் முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர், வீதியைக் கடக்க முற்பட்ட மாட்டுக்கு இடங்கொடுத்துச் செல்ல முற்பட்ட வேளையே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.