2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று 114 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெப்ரவரி 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடத்தப்பட்டு, 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பெப்ரவரி 27ஆம் திகதி முதல் நேற்று வரை ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழு நிலை விவாதம் இடம்பெற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது 114 மேலதிக வாக்குகளால் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79 வது உறுப்புரைக்கு அமைய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
இதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாக அமுலுக்கு வந்தது.