ஒமிக்ரோன், டெங்கு, வைரஸ் காய்ச்சல் சமூகத்தில் பரவுகின்றது!

0
161

ஒமிக்ரோன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை சமூகத்தில் பரவுவது அவதானிக்கப்படுகின்றது.
48 மணி நேரத்துக்கு மேலாகக் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவேண்டும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.
மக்கள் தாங்கள் எந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தாங்களாகவே முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் அவர் எச்சரித்
துள்ளார். ஒமிக்ரோன் மற்றும் டெங்கு ஆகியவை வேகமாக அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
தவிர, தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மருத்துவ சிகிச்சையை பெறலாமா வேண்டாமா என மக்கள் தங்கள் சொந்த முடிவுக்கு வரக்கூடாது என்றும் 48 மணித்தியாலத்துக்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறுங்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.