31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கரவெட்டி தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் தகவல்களை வழங்க கோரிக்கை!

கரவெட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்புடையவர்கள் அச்சமின்றி
சமூகப் பொறுப்புணர்வுடன் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்.கரவெட்டியிலுள்ள மனோகரா அல்வாயைச் சேர்ந்த ஓரே குடும்பத்திலுள்ள மூவருக்கு கொரோனா தொற்று நேற்று (05.11.2020) இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள்;; கரவெட்டி மற்றும் அண்மைய பிரதேசங்களில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பல்வேறு நபர்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றனர்.

இவர்கள் தொடர்பான விவரங்கள் தெரிந்தவர்கள் அல்லது இவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24 மணிநேர அவசர அழைப்புக்குரிய 021 222 6666 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொண்டு விவரங்களை அறியத்தரவும். இவ்விவரங்கள் தொடர்பில் இரகசியத்தன்மை இறுக்கமாகப் பேணப்படும்.

இவர்கள் தொடர்பான விவரங்களை அறிவிப்பதன் மூலம் உங்;களுக்குக் கொரோனா தொற்று உள்ளதா? எனப் பரிசோதித்து அறியவும், உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை உடன் வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நோய் எமது மாவட்டத்தில்; பரவாதிருக்க அச்சமின்றி சமூகப் பொறுப்புணர்வுடன் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles