31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

களுபோவில வைத்தியசாலையில் மூவருக்கு கொரோனா!

களுபோவில வைத்தியசாலையின் வைத்தியர்கள் இருவர் மற்றும் தாதி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவர் வார்ட்டில் கடமையாற்றியவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

குறித்த வார்ட்டில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை ஒன்றும் அவருடைய தாயும் கொரோனா தொற்றுக்குள்ளானதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையிலேயே குறித்த மூவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இருப்பினும் இதனால் வைத்தியசாலையின் நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles