காய்ச்சலுக்கு மருந்து குடித்த பெண் உயிரிழப்பு!

0
65

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று இ மருந்தை உட்கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது .

யாழ்ப்பாணம் , சாவற்காட்டு பகுதியை சேர்ந்த 63 வயதுடைய விஜயகுமார் குணராணி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த பெண்ணுக்கு கடந்த 20ஆம் திகதி ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக இ 22ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று இ மருந்தினை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

பெற்றுக்கொண்ட மருந்தை உட்கொண்ட பின்னர்இஞாயிற்றுக்கிழமை (23) அன்று குறித்த பெண்ணின் உடல் நிலை மிக மோசமாகி மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் .

குறித்த பெண்ணின் உடற்கூற்று பரிசோதனைகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு மேலதிக பரிசோதனை நடவடிக்கைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.