காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகிறது.
இந்த சந்திப்புக்கான அழைப்பை, ஜனாதிபதி விடுத்திருந்தார்.
எனினும் இந்த சந்திப்புக்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட முன்னணி ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் கூடாரங்களை அகற்றுமாறு காவல்துறை விடுத்த கோரிக்கைக்கு இணங்க சில கூடாரங்கள் அகற்றப்பட்டு வரும் நிலையில், கூடாரங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிராக சிலர், நீதிமன்றின் தலையீட்டை கோரியுள்ளனர்.