காஸா வைத்தியசாலையின் மீது இஸ்ரேல் தாக்குதல்

0
10

காஸா நகரத்திலுள்ள வைத்தியசாலையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில்இ மருத்துவப் பணியாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.காஸா மீதான இஸ்ரேலின் போரில் தங்குமிடங்களை இழந்தும்இ படுகாயமடைந்தும் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் முவாஸி பகுதியிலுள்ள குவைத்தி ஃபீல்ட் வைத்தியசாலையில் தஞ்சமடைந்து வந்தனர்.

இந்நிலையில்இ நேற்று (15) அந்த வைத்தியசாலையின் வடக்கு வாயிலின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அங்கு பணிபுரிந்து வந்த மருத்துவப் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.இந்தத் தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் பணிபுரிந்த மருத்துவர்கள். குறிப்பாக இருவரின் உடல்நிலை அபாய நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேல் இராணுவத்தின் தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.இந்தத் தாக்குதல்கள் அனைத்திற்கும் அந்த வைத்தியசாலையில் ஹமாஸ் படையினர் பதுங்கியிருந்தாகவும் அதனால் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது.இதனை முற்றிலும் மறுத்த அந்நகர மருத்துவப் பணியாளர்கள் இஸ்ரேல் தொடர்ந்து போர் குற்றங்களில் ஈடுபட்டு காஸாவின் சுகாதார வழிகளை முற்றிலும் அழித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.