31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கிளிநொச்சியில் போராட்டம்!

கிளிநொச்சி – இந்திராபுரம் பிரதான வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையினை பாதுகாப்பான ரயில் கடவையாக புனரமைத்து தருமாறு கோரி, பிரதேச மக்கள் இன்று கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள் குடியேற்ற கிராமமான முகமாலை இந்திராபுரம் பிரதான வீதியில் உள்ள மக்கள் ரயில் கடவையானது இதுவரை புனரமைக்கப்படாமலும் பாதுகாப்பற்ற ரயில் கடவையாகவும் காணப்படுவதனால் இதனை பாதுகாப்பான நிரந்தரமான கடவையாக அமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்தனர்.
குறித்த மீள் குடியேற்ற பிரதேசங்களில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வருவதனால் மாற்றுவழிப்பாதை எதனையும் பயன்படுத்த முடியாது உள்ளதாகவும், பிரதேச மக்கள் இவ்வீதியையே பயன்படுத்த வேண்டி இருப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தின் நிறைவில் ரயில் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றிற்கு மகஜர்களையும் கையளித்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles