குரோதி ஆண்டில் குரோதமற்று செயல்படுங்கள்

0
103

குரோதி ஆண்டு பிறந்திருக்கின்றது. ஆண்டுகள் கடந்தனவே தவிர, தமிழ் மக்களின் அரசியல் வாழ்வில் முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. 75வருடகால தோல்வியை காவித் திரி யும் பொழுது கூட, கடந்த காலத்திலிருந்து எதனையும் கற்றுக் கொள்ள முயற்சிக்கும் போக்கைக் காண முடியவில்லை. இலங்கை தமிழரசுக் கட்சியை உருவாக்கிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம் கூறினார் – நாங்கள் ஓர் இலக்கை நோக்கி முன்னேறுகின்றோம் ஒரு வேளை எங்கள் இலக்கில் தோல்வி யடைந்தால், நாளைய தலைமுறை, எங்களுடைய பதாதை களை சுமந்து செல்லும். அப்படிக் கூறியவரால் உருவாக்கப்பட்ட தமிழரசு கட்சியின் புதிய தலைமுறை என்ன செய்து கொண் டிருக்கின்றது? தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைமை என்ன? அவர் உருவாக்கிய இரண்டு கட்சிகளுமே, வழக்கில் இருக்கின்றது.
மறுபுறம், ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் ஜனநாயக நீரோட்டத்திற்கு திரும்பிய முன்னாள் ஆயுத விடுதலை இயக்க கட்சிகளோ, நாடாளுமன்ற கதிரைகளை குறிவைத்து, ஓர் ஆசனத்தையாவது பெற்றுவிட வேண்டும் என்னும் எதிர்பார்ப்புடன் காத்துக்கிடக்கின்றன. இதுதான் இன்றைய தமிழர் அரசியல் நிலைமை. 2009இல் யுத்தம் நிறைவுற்ற போது, தமிழ் மக்களின் நம் பிக்கையாக இருந்த கூட்டமைப்பின் இன்றைய நிலை என்ன என்பது தொடர்பில் மீண்டுமொருமுறை கூற வேண்டியதில்லை. இரா.சம்பந்தன் இருக்கின்றபோதே, அவர் வழிநடத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இல்லாமல் போய்விட்டது.
சம்பந்தன் தொடர்பில் பேசுவதில் பலனில்லாது விட்டாலும் கூட, அவரது தலைமைத்துவம், ஒரு தலைமைத்துவம் எவ்வாறு இருக்கக் கூடாது என்பதற்கான உதாரணமாகிவிட்டது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை, தமிழ் கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்னும் கேள்வி எழுந்திருக்கின்றது. தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி, தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
குரோதங்களாலும், நாடாளு மன்ற கதிரைச் சிக்கல்களாலும் பாதிக்கப்பட்டிருக்கின்ற தமிழ் தேசிய கட்சிகளால் ஓற்றுமையாக செயல்பட முடியுமா? ஏனெ னில் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட முடியாமல் போனால், இந்த வரலாற்று வாய்ப்பை பயன்படுத்த முடி யாது. தமிழ் மக்கள் பிளவுறவில்லை – மாறாக, தமிழ் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகளே, தமிழ் மக்களை கூறுபோட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலைமை மாற வேண்டும். இந்த ஆண்டிலாவது அரசியல் குரோதங்களை மறந்து, வாக்கரசியலை புறம்தள்ளி, தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக காக்கும் வகையில், தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுபட்டுச் சிந்திக்க முன்வர வேண்டும்.