28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனா தொடர்ந்து பரவ அரசின் தவறான முடிவுகளே காரணம் – சஜித் பிரேமதாஸ

அரசாங்கத்தின் தவறான முடிவுகளே நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்ந்தும் பரவக் காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்படும் தருணத்தில் மூன்றாவது அலை உருவாகிவிடும்.

பெருமளவானவர்கள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ள போதிலும், அவர்கள் அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்படாததை தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

அரசாங்கம் தற்போது பின்பற்றும் நடைமுறைகள் காரணமாக மேலும் பலர் பாதிக்கப்படும் ஆபத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles