31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனா தொற்று நோய் அறிகுறி இல்லாதவர்களை வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை-அசேல குணவர்த்தன

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்களை மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன் பிரகாரம், முதலாவது பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டு 14 நாள்கள் கழிந்த பின்னர், இரண்டாவது பரிசோதனை நடத்தாமல், அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்போவதாக அவர் கூறினார்.
இடைப்பட்ட சிகிச்சை நிலையங்களில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், நோய் அறிகுறிகள் காட்டாதவர்கள் தத்தமது வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுவர்-என்றார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles