கொழும்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், கோழிப் பண்ணையிலிருந்து வலுக்கட்டாயமாக இரு கோழிகளை கொண்டு சென்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வீரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திஸ்ஸமஹராம, கங்காசிறிபுரவில் உள்ள கோழிப் பண்ணை உரிமையாளரிடமிருந்து வந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபரை திஸ்ஸமஹராம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டமையால் 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், 100,000 ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.